Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு
பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ராமைய்யா வஸ்தாவையா என்ற படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். அவர் சில காட்சிகளில் வருவதோடு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். பிரபுதேவாவின் படத்தில் ஒரு சிங்கள நடிகையை நடிக்க வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதே போன்ற பாலகனான, தன் மகனை இழந்த பிரபு தேவாவுக்கு இந்த வலி நிச்சயம் தெரிந்திருக்கும்.
இந்நிலையில் இலங்கையிலிருந்து நடிகையை அழைத்து வந்து தன் படத்தில் பிரபுதேவா நடிக்க வைப்பது மன்னிக்க முடியாதது. இலங்கை நடிகையை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.