Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டி.எம். சௌந்தர்ராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத சிவாஜி வாரிசுகள்?
சென்னை: பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தவில்லையாம்.
பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் அண்மையில் காலமானார். அவருக்கு திரையுலகினிர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஒரு முக்கியமான திரைக்குடும்பம் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லையாம்.
டிஎம்எஸ் எம்.ஜி.ஆருக்கு பாடினால் மக்கள் திலகம் தான் பாடிகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். அதே டிஎம்எஸ் சிவாஜி கணேசனுக்கு பாடினால் நடிகர் திலகம் தன் குரலில் தான் பாடுகிறாரோ என்று தோன்றும். அந்த அளவுக்கு குரலை மாற்றி பாடுவார். அவர் சிவாஜி கணேசனுக்கு ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் டிஎம்எஸ்ஸின் இறுதிச் சடங்கிலோ, அதன் பிறகு நடந்த துக்க நிகழ்ச்சிகளிலோ சிவாஜி கணேசன் வாரிசுகள் யாரும் கலந்து கொள்ளவில்லையாம். அவர்கள் வராதது தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.