Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
அவர் மட்டும் ஒஸ்தியா?: சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்
Recommended Video
சென்னை: ஓட்டு போடப் போய் சிவகார்த்திகேயன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஓட்டு போடச் சென்றார். வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாத நிலையிலும் அவர் ஓட்டு போட அனுமதித்துள்ளனர்.
அவரை ஓட்டு போட அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
களவாணி 2 விவகாரம்: இயக்குனர் சற்குணம் பொய் சொல்கிறார்... தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு அறிக்கை
நடிகர்
வாக்காளர் பட்டியிலில் சாதாரண மக்களின் பெயர் இல்லை என்றால் வாக்களிக்கவிடவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?. நடிகர் என்றால் ஒஸ்தியா என்று விமர்சனம் எழுந்துள்ளது.
சர்ச்சை
இம்முறை லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்று சிவகார்த்திகேயனும், அஜித்தும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். சிவகார்த்திகேயனை எந்த அடிப்படையில் வாக்களிக்க அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜித் வரிசையில் நிற்காமல் சென்றதால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
செய்தி
தேர்தல் நாள் அன்று ரஜினிகாந்த், கமல் ஹாஸன், சூர்யா, விஜய், விஜய் சேதுபதி என்று எத்தனையோ திரையுலக பிரபலங்கள் வாக்களித்தனர். ஆனால் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி மட்டும் தான் இன்றும் பேசப்படுகிறது. காரணம் இருவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
ஆதரவு
சிவகார்த்திகேயனுக்கும் சரி, அஜித்துக்கும் சரி ரசிகர்கள் ஆதரவாக உள்ளனர். தனது வாக்குரிமையை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன் மீகு குறை சொல்லக் கூடாது என்கிறார்கள் ரசிகர்கள். அஜித் வரிசையில் நிற்காததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவரின் பெருந்தன்மையை பார்க்க வேண்டும். வழக்கமாக வரிசையில் நிற்கும் அவர் இம்முறை நிற்கவில்லை என்றால் ஏதாவது முக்கிய காரணம் இருக்கும் என்கிறார்கள் தல ரசிகர்கள்.