Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"காவேரியம்மா மகன் கிரவுண்ட்ல இருந்தா.." - சிவகார்த்திகேயன் பட டைரக்டர் கருத்து!
Recommended Video
சென்னை : இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டி அதிக கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டம் மைதானத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு ஆகியவற்றுக்காக தமிழர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுக்க போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்கும் இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான டி20 ஐ.பி.எல் போட்டியின்போது தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுக்கத் தயாராகி வருகின்றனர்.
இதனால், ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்ப்புக் காட்டும் விதத்திலான பொருட்கள், கார் சாவி, குடிநீர் பாட்டில், பேக் உள்ளிட்ட பல பொருட்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படுள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்க ரசிகர்கள் இந்தப் போட்டியைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திரையுலகினர் பலரும் கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநரும், அடுத்து சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பவருமான டைரக்டர் ரவிகுமார் ராஜேந்திரன் இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
"சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழந்து, அந்த மைதானத்திற்குள் சென்று மகிழத்தான் வேண்டுமா?! ஒன்றுபடுவோம் புறக்கணிப்போம்! - உடல்நிலை சரியில்லை... காவேரியம்மா மகன் மைதானத்திலிருந்தால் உடனே வரவும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.