Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பட்ஜெட் பிரச்னையால் பாதியிலேயே நிற்கும் அயலான்… சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு
சென்னை: சிவகார்த்தியேன் தற்போது அனுதீப் இயக்கத்தில் 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவர் நடித்துள்ள 'அயலான்' படத்தின் ரிலீஸ் பற்றியும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அயலான் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்... நடிகர் சிவகார்த்திகேயன் உறுதி!
சயின்ஸ் பிக்சனில் உருவாகும் அயலான்
2015ல் வெளியான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். விஷ்ணு விஷால், கருணாகரன் நடித்த இந்தப் படம் டைம் டிராவல் பின்னணியில் அட்டகாசமான திரைக்கதையோடு பிரமாதமாக உருவாகியிருந்தது. ரசிகர்களிடமும் சினிமா விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படத்தை இயக்க முடிவெடுத்தார் ரவிக்குமார். மேலும், இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் காரணமாக பாதியில் நின்ற சூட்டிங்
சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் என பலரும் நடிக்க ஒப்பந்தமான நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆனார். 2018ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் 3 பாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் என சொல்லப்பட்ட அயலான், பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நின்று போனது.
அயலானுக்குப் பிறகு 5 படங்கள் ரிலீஸ்
பட்ஜெட் காரணமாக பாதியில் நின்றுபோன 'அயலான்' படத்தை, கேஜிஆர் நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து மீண்டும் படப்பிடிப்பை வேகப்படுத்திய அயலான் டீம், கடந்தாண்டில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்தது. இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மான் இசையில், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி தூள் கிளப்பியது. இதனிடையே அயலான் படம் தொடங்கப்பட்ட பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்கள் வெளியாகிவிட்டன. ஆனாலும், அயலான் இன்னும் வெளியாகவில்லை.
அடுத்தாண்டு தான் வெளியாகுமா?
அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இது சயின்ஸ் பிக்சன் படம் என்பதால், கிராஃபிக்ஸ் பணிகளும் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. இதனிடையே சிவகார்த்திகேயனும் அயலான் பட தயாரிப்பாளரும் சந்தித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏற்கனவே டான் படம் வெளியானதோடு, அடுத்து பிரின்ஸ் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதனால், அயலான் படத்தை அடுத்தாண்டு வெளியிடலாம் என சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.