Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டாக்டர் படத்தின் 3வது பாடல் So Baby இன்று ரிலீஸ்.. ரசிகர்கள் ஆர்வம்!
சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர்.
இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார், ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
இந்த படத்தின் பாடல் குறித்த அறிவிப்பை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதி ரிலீசுக்கு காத்துள்ளது.
சிவகார்த்திகேயன் வரிகளில்
இந்த படத்திலிருந்து முதலில் செல்லம்மா செல்லம்மா பாடலை வெளியிட்டு இருந்தனர். சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடல் வைரலானது, தற்போது
யூ டியூபில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
மெல்லிய இசை
அதைத்தொடர்ந்து டாக்டர் படக்குழு நெஞ்சமே பாடலை வெளியிட்டது. அனிருத்தின் மெல்லிய இசையில், சிறப்பான மெலோடி பாடலாக நெஞ்சமே பாடல் அமைந்தது. இந்த பாடலுக்கு மோகன் வரிகள் எழுத, அனிருத் பாடலை பாடியிருந்தார். பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்று வெளியீடு
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு படக்குழு So Baby பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலுக்கும் சிவகார்த்திகேயனே வரிகள் எழுதியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலின் மேல் ஆர்வம் கூடியுள்ளது.