Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்
சென்னை: பிந்து மாதவியை காதலிப்பதாக கிளம்பியுள்ள வதந்திகள் வருத்தம் தருகின்றன. நான் உண்மையில் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன், என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சித் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இப்போது சினிமாவில் வேகமாக வளரும் நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன்.
இவருக்குத் திருமணமாகிவிட்டது. ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். நேற்று இருவருக்கும் மூன்றாவது திருமண நாள்.
இந்த நாளில் சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான வதந்தி கிளம்பியது.
அவருக்கும் பிந்து மாதவிக்கும் காதல் என்றும், இந்தக் காதலால் சிவகார்த்திகேயன் வீட்டில் பெரும் சண்டை என்றும், பிரச்சினையிலிருந்து வெளியில் வர மனைவியை விவாகரத்து செய்ய அவர் யோசிப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் பெற, நடிகர் சிவகார்த்திகேயன், பிந்து மாதவி இருவர் தரப்பையும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் யாருடைய போனையும் எடுக்கவே இல்லை.
எனவே மீடியாவில் இருவரைப் பற்றியும் தீயாய் பரவியது வதந்தி.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த வதந்திகளை மறுத்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "என் திருமண நாளும் அதுவுமாய், இப்படி ஒரு செய்தியைப் பார்த்து வருந்தினேன்.
எனக்கும் அந்த நடிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரும் நானும் ஒரு படத்தில் நடித்தேன், அதுவும் ஜோடியாகக் கூட இல்லை. எங்களுக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லை.
எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சத்தமாக சண்டை போடவும் இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் கூட கேட்டுப் பாருங்கள்.
நாங்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் திருமண வாழ்க்கைப் பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம். ஷூட்டிங்கில் இருக்கும்போது நான் போன் எடுப்பதில்லை. எனவே என்னிடம் பேச விரும்பும் மீடியா நண்பர்கள் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்," என்றார்.