Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்
சென்னை: பிந்து மாதவியை காதலிப்பதாக கிளம்பியுள்ள வதந்திகள் வருத்தம் தருகின்றன. நான் உண்மையில் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன், என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சித் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இப்போது சினிமாவில் வேகமாக வளரும் நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன்.
இவருக்குத் திருமணமாகிவிட்டது. ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். நேற்று இருவருக்கும் மூன்றாவது திருமண நாள்.
இந்த நாளில் சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான வதந்தி கிளம்பியது.
அவருக்கும் பிந்து மாதவிக்கும் காதல் என்றும், இந்தக் காதலால் சிவகார்த்திகேயன் வீட்டில் பெரும் சண்டை என்றும், பிரச்சினையிலிருந்து வெளியில் வர மனைவியை விவாகரத்து செய்ய அவர் யோசிப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் பெற, நடிகர் சிவகார்த்திகேயன், பிந்து மாதவி இருவர் தரப்பையும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் யாருடைய போனையும் எடுக்கவே இல்லை.
எனவே மீடியாவில் இருவரைப் பற்றியும் தீயாய் பரவியது வதந்தி.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த வதந்திகளை மறுத்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "என் திருமண நாளும் அதுவுமாய், இப்படி ஒரு செய்தியைப் பார்த்து வருந்தினேன்.
எனக்கும் அந்த நடிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரும் நானும் ஒரு படத்தில் நடித்தேன், அதுவும் ஜோடியாகக் கூட இல்லை. எங்களுக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லை.
எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சத்தமாக சண்டை போடவும் இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் கூட கேட்டுப் பாருங்கள்.
நாங்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் திருமண வாழ்க்கைப் பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம். ஷூட்டிங்கில் இருக்கும்போது நான் போன் எடுப்பதில்லை. எனவே என்னிடம் பேச விரும்பும் மீடியா நண்பர்கள் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்," என்றார்.