Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்கியது.. முன்னணி கலைஞர்கள் இணைகிறார்கள்!
சிவகார்த்திகேயனின் அடுத்த படத் தொடக்கவிழா இன்று சென்னையில் நடந்தது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் என்பவர் இயக்குகிறார்.
இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இவர்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பிசி ஸ்ரீராம், இசை அமைக்கிறார் அனிருத். அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜும் படத் தொகுப்புக்கு ரூபனும் பொறுப்பேற்றுள்ளனர்.
ஒலி வடிவமைப்பாளர் ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.
'ஒரு படத்தின் உன்னதமான தொழில் நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பணி புரிவது எனக்கு மிக்க பெருமை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில் நுட்பகலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. என்னுடைய நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தரமான படங்களையும் , உன்னதமான தொழில் நுட்ப கலைஞர்களையும் ஆதரித்து ஊக்குவிக்கும்,' என்கிறார் புதிய தயாரிப்பாளரான ஆர் டி ராஜா.
இந்த ராஜா வேறு யாருமல்ல... சிவகார்த்திகேயனின் மேனேஜராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.