Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி என் படங்களில் 'அந்த மாதிரி காட்சிகளே' இருக்காது! - அப்டி போடுங்க சிவகார்த்திகேயன்!!
Recommended Video
'பிரிக்க முடியாதது என்னவோ...
தமிழ் சினிமாவும் டாஸ்மாக்கும்...'
-இன்றைக்கு நவீன திருவிளையாடல் காட்சி வைத்தால் இப்படித்தான் கேள்வி பதில் இருக்கும். அந்த அளவு நீக்கமற நிறைந்துவிட்டது டாஸ்மாக் காட்சிகள். மிக சர்வ சாதாரணமாக குடிக்கும் காட்சிகளை வைக்கிறார்கள். அதற்கு அனைவரும் பார்க்கக் கூடிய யு சான்றிதழும் தருகிறது சென்சார்.
இளைய சமுதாயத்தை குடியை நோக்கி தள்ளும், சீரழிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக இத்தகைய சினிமா காட்சிகள் உள்ளன என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எந்த இயக்குநரும் காதில் வாங்குவதாக இல்லை.
சீனியர் நடிகர்களான ரஜினி, விஜய் போன்றவர்கள் இப்போது தங்கள் படங்களில் அந்த மாதிரி காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.
"முன்பெல்லாம் டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதன் கொடிய தாக்கம் எனக்குப் புரிகிறது. போதும்... இனி என் படங்களில் இந்த மாதிரி எந்தக் காட்சியும் இருக்காது. என் இயக்குநர்களும் இனி அத்தகைய காட்சிகளை எனக்கு மட்டுமல்ல, வேறு கேரக்டர்களுக்கும் வைக்க மாட்டாரகள்," என்றார்.
பலே சிவா!