சிவகார்த்திகேயன் யார் கட்டுப்பாட்டிலோ உள்ளார்: எஸ்கேப் மதன்
சென்னை: சிவகார்த்திகேயன் யார் கட்டுப்பாட்டிலோ இருப்பதாக தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் தெரிவித்துள்ளார்.
புதுப்படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயனோ இதை மறுக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக தன்னை சிலர் மிரட்டுவதாகவும் சிவா கூறினார். இந்நிலையில் இது பற்றி எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் கூறுகையில்,
சிவகார்த்திகேயன் என்னுடைய நண்பர். அவர் யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு இப்படி எல்லாம் பேசி வருகிறார். அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருப்பதால் தான் இப்படி பழி சுமத்துகிறார் என்றார்.
பண விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் வரும் 24ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications