Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிவகார்த்திகேயன் கழுத்து சுளுக்கு– தனுஷால் வந்த ஒரு தர்மசங்கடம்!
தமிழ் சினிமாவின் இப்போதைய கீரி பாம்பு காம்பினேஷன் என்றால் அது தனுஷும் சிவகார்த்திகேயனும்தான். அந்த தனுஷ், சிவகார்த்திகேயனோடு விஜய் சேதுபதியையும் சேர்த்து மேடையேற்றப் போகிறார் கே.எஸ்.ரவிகுமார் என்றதுமே தொற்றியது பரபரப்பு. முடிஞ்சா இவன புடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. ஆனால் அறிவித்தபோது ஏற்பட்ட பரபரப்பு விழா முடிந்த பின்னரும் நீடிக்கிறது.
விழா தொடங்குவதற்கு முன்பே தனுஷ், விஜய்சேதுபதி, சதீஷ் உள்ளிட்டோர் மேடையின் வலப்பக்கம் இருந்த இருக்கைகளில் அமர, சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் இடது பக்கம் தனியாக அமர்ந்திருந்தார். மேடையில் தனுஷ் பக்கத்தில் சிவகார்த்திகேயனை அமர வைத்தார்கள்.
விழா முடியும்வரை தனுஷும் சிவாவும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.
முக்கியமாக, தனுஷ் மைக் பக்கமே பார்த்துக்கொண்டிருக்க சிவாவோ தனுஷ் பக்கம் கூட பார்வையை விடாமல் தவிர்த்தார். ஆக, இரண்டு பேருக்குமே கழுத்தில் சுளுக்கே வந்திருக்கும். அதிலும் சிவா தான் ரொம்ம்ம்ம்ப பாவம். பக்கத்தில் இருந்த விஜய்சேதுபதியிடம் பேசிக்கொண்டு ரிலாக்ஸ் ஆக இருப்பது போலவே காட்டிக்கொண்டாலும் எல்லாவற்றையும் மீறி ஒரு டென்ஷன் பரவிக்கொண்டே தான் இருந்தது. சிவா பேசும்போது தனுஷுக்கு நன்றி சொல்ல, பதிலுக்கு தனுஷ் பேசும்போது சிவாகூட நடிச்சுட்டேன் என சிவாவைக் குறிப்பிட்டார்.
அதுதான் ரெண்டு பேருக்கும் ஆகலைனு தெரியுதுல்ல... இனிமேலாவது இப்படி ஒரு தர்மசங்கடத்தை கொடுக்காதீங்கப்பா!