Don't Miss!
- News அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர்.. கான்ஸ்டபிள் வேலையை தூக்கி எறிந்து விட்டு யுபிஎஸ்சியில் சாதித்த இளைஞர்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம்... சிவகுமார், சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உதவி
சென்னை: பெப்சி அமைப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்தை வழங்கி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ். பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ரத்து காரணமாக, இந்தியா முழுவதும் சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாவில் தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்று நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அனைத்து தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார்.
ஷூட்டிங் இல்லை... வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ... வைரலாகும் வீடியோ!
இந்த கோரிக்கையை ஏற்று நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் ரூபாயை, பெப்சி அமைப்புக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சத்தை பெப்சிக்கு வழங்கியுள்ளார்.