Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மோசடி வழக்கு.. கோர்ட் வளாகத்தில் நடந்த 'பவர் (ஸ்டார்)' மோதல்!
சிவகாசி: நிதி மோசடி வழக்கில் சிவகாசி நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் ஆஜராக வந்தபோது அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், மனுதாரரின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
லத்திகா என்ற படத்தை தயாரி்த்து, இயக்கியதுடன் தானே ஹீரோவாகவும் நடித்து நானும் இருக்கிறேன் என்று நிரூபித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சாதாரண சீனிவாசனாக இருந்த அவர் தன் பெயருக்கு முன்னால் பவர் ஸ்டார் என்னும் பட்டத்தை தானாகவே சேர்த்துக் கொண்டார்.
அவர் பிரபலமாக ஃபேஸ்புக், யூ டியூப் ஆற்றிய பங்கு கொஞச, நஞ்சமல்ல. சளைக்காமல் படங்கள் எடுத்து நடிக்கும் அவர் அடுத்ததாக ஆனந்த தொல்லை என்ற படத்தின் மூலம் நம்மையெல்லாம் விரைவில் சந்திக்கவிருக்கிறார்.
தாஸ் என்பவரிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் \ரூ. 9 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், தாஸின் ஆட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மோதலில் ஈடுபட்ட அனைவரையும் கூண்டோடு அள்ளிக் கொண்டு போய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.