Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நாகார்ஜுனா- கார்த்தி படம்: க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார் சிவகுமார்
தமிழ் - தெலுங்கில் நாகார்ஜூனா, கார்த்தி இணைந்து நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் நடிகர் சிவகுமார்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, தமிழ் நடிகர் கார்த்தி இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். வம்சி இயக்கும் இந்த இரு மொழிப் படத்தை பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பு நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பூஜையுடன் தொடங்கிய இந்த படப்பிடிப்பை கார்த்தியின் அப்பாவும், நடிகருமான சிவகுமார் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் கார்த்தி பேசுகையில், "நான் சிறு வயதிலிருந்தே ரசித்து பார்த்த நாகர்ஜூனாவிடம் இணைந்து நடிப்பது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தனை நாட்களாக ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்துப் போனதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்றார்.
இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.