Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிங்கத்துக்கே பாடம் எடுத்த ஜோதிகா... மருமகளை மெச்சிய மாமனார்!
Recommended Video
சென்னை : பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'நாச்சியார்'.
பி ஸ்டூடியோஸ் மற்றும் ஈயான் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் 'நாச்சியார்' படம் பார்த்துவிட்டு சூர்யாவின் தந்தையும், ஜோதிகாவின் மாமனாருமாகிய சிவகுமார், பாலாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சிவகுமார்
தனது மருமகள் ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பது மாமனார் சிவகுமாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்பார்கள். ஆனால் 'நாச்சியார்' படத்தைப் பார்த்துவிட்டு பாலாவை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார் சிவகுமார். அதோடு ஜோதிகாவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
பாலாவின் கைவண்ணம்
இது தொடர்பாக சிவகுமார் கூறியிருப்பதாவது, "பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை.
சமநிலை திரைக்கதை
வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு சமநிலை திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவை வாழ்த்தி வரவேற்போம்.
இளம் தேவதை
ஜி.வி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்கக்கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா..!
நாச்சியார்
நாச்சியார் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன்.
சிங்கத்துக்கே பாடம் எடுத்த ஜோதிகா
சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்." என சிவகுமார் தெரிவித்துள்ளார்.