Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. 55 வருடத்துக்கு முன் வசித்த வாடகை வீட்டில் பிரபல நடிகர் சிவகுமார்!
சென்னை: சென்னை வந்த புதிதில், தான் வசித்த வீட்டுக்குச் சென்று போட்டோ எடுத்து திரும்பி இருக்கிறார், நடிகர் சிவகுமார்.
நடிகர் சிவகுமார், சென்னை ஓவியகல்லூரியில் படித்தவர். அந்த காலகட்டத்தில் 1958 ஆம் ஆண்டு சென்னை புதுப்பேட்டையில் உள்ள திருவேங்கடம் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.
இப்போது சென்னையில் பிரமாண்டமான சொந்த வீட்டில் வசிக்கும் சிவகுமாருக்கு திடீரென்று பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்தது.
பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்!
பார்க்க வேண்டும்
இந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம். இதையடுத்து சமீபத்தில் ஒரு நாள் இரவில், முகக்கவசம் அணிந்துக்கொண்டு அவர்களுடன் சென்று இந்த வீட்டைக் காண்பித்திருக்கிறார் நடிகர் சிவகுமார். அவர் மனைவியும் அந்த வீட்டைப் பார்க்கவில்லையாம். இதனால் பகலில் அந்த வீட்டுக்குப் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.
புகைப்படம்
இதையடுத்து தனது மனைவியுடன் நேற்று அந்த வீட்டுக்குச் சென்ற நடிகர் சிவகுமார், தான் மட்டும் அந்த வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த வீடு இன்னும் பூட்டி கிடக்கிறது. அங்கு யாரும் இப்போது வசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார். 1958 ஆம் ஆண்டில் இருந்து 1965 வரை, மாதம் 15 ரூபாய் வாடகை கொடுத்து இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார்.
ஏராளமான ஓவியம்
ஏழு வருடம் இந்த வீட்டில் வாழ்ந்தபோது ஏராளமான ஓவியங்களையும் வரைந்துள்ளார். அவர் வரைந்த அத்தனை ஓவியங்களும் இங்கிருக்கும்போது வரையப் பட்டவைதானாம். குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த அந்த நாட்கள் பொன்னானது என்று கூறுகிறார் நடிகர் சிவகுமார்.
மொத்த செலவு
டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுற்றி.. அதாவது அஜந்தா, எல்லோரா, குதுப்மினார், பதேபூர் சிக்ரி என்று பல பகுதிகளுக்கும் சென்று ஓவியம் வரைந்திருக்கிறார் நடிகர் சிவகுமார். இப்போது ஸ்டார் ஓட்டலில் சாப்பிடச் சென்றால் ரூ.15 ஆயிரம் பில் வருகிறது, ஆனால், அப்போது இவ்வளவு இடங்களையும் சுற்றி வர ஆன மொத்த செலவு, வெறும் ரூ.7500 தான் என்கிறார், சிவகுமார்.