Don't Miss!
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Sports சிக்சர் மன்னன் சிவம் துபே சாதனை.. 27 பந்தில் 66 ரன்கள் குவிப்பு.. 7 சிக்சர் விளாசி ரெக்கார்ட்
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. 55 வருடத்துக்கு முன் வசித்த வாடகை வீட்டில் பிரபல நடிகர் சிவகுமார்!
சென்னை: சென்னை வந்த புதிதில், தான் வசித்த வீட்டுக்குச் சென்று போட்டோ எடுத்து திரும்பி இருக்கிறார், நடிகர் சிவகுமார்.
நடிகர் சிவகுமார், சென்னை ஓவியகல்லூரியில் படித்தவர். அந்த காலகட்டத்தில் 1958 ஆம் ஆண்டு சென்னை புதுப்பேட்டையில் உள்ள திருவேங்கடம் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.
இப்போது சென்னையில் பிரமாண்டமான சொந்த வீட்டில் வசிக்கும் சிவகுமாருக்கு திடீரென்று பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்தது.
பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்!
பார்க்க வேண்டும்
இந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம். இதையடுத்து சமீபத்தில் ஒரு நாள் இரவில், முகக்கவசம் அணிந்துக்கொண்டு அவர்களுடன் சென்று இந்த வீட்டைக் காண்பித்திருக்கிறார் நடிகர் சிவகுமார். அவர் மனைவியும் அந்த வீட்டைப் பார்க்கவில்லையாம். இதனால் பகலில் அந்த வீட்டுக்குப் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.
புகைப்படம்
இதையடுத்து தனது மனைவியுடன் நேற்று அந்த வீட்டுக்குச் சென்ற நடிகர் சிவகுமார், தான் மட்டும் அந்த வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த வீடு இன்னும் பூட்டி கிடக்கிறது. அங்கு யாரும் இப்போது வசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகுமார். 1958 ஆம் ஆண்டில் இருந்து 1965 வரை, மாதம் 15 ரூபாய் வாடகை கொடுத்து இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார்.
ஏராளமான ஓவியம்
ஏழு வருடம் இந்த வீட்டில் வாழ்ந்தபோது ஏராளமான ஓவியங்களையும் வரைந்துள்ளார். அவர் வரைந்த அத்தனை ஓவியங்களும் இங்கிருக்கும்போது வரையப் பட்டவைதானாம். குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த அந்த நாட்கள் பொன்னானது என்று கூறுகிறார் நடிகர் சிவகுமார்.
மொத்த செலவு
டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுற்றி.. அதாவது அஜந்தா, எல்லோரா, குதுப்மினார், பதேபூர் சிக்ரி என்று பல பகுதிகளுக்கும் சென்று ஓவியம் வரைந்திருக்கிறார் நடிகர் சிவகுமார். இப்போது ஸ்டார் ஓட்டலில் சாப்பிடச் சென்றால் ரூ.15 ஆயிரம் பில் வருகிறது, ஆனால், அப்போது இவ்வளவு இடங்களையும் சுற்றி வர ஆன மொத்த செலவு, வெறும் ரூ.7500 தான் என்கிறார், சிவகுமார்.