twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திப்பாடகியை இரண்டாவது திருமணம் செய்கிறார் டிரம்ஸ் சிவமணி

    By Mayura Akilan
    |

    சென்னை: சென்னையை சேர்ந்தவர் டிரம்ஸ் சிவமணி. டி.ராஜேந்தர் குழுவில் பணியாற்றிய சிவமணி தனது டிரம்ஸ் இசை கலை மூலம் புகழ்பெற்றார். இன்றைய தேதியில் உலகிலேயே நம்பர் ஒண் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தான். ஏ.ஆர்.ரகுமானுடனும், தனியாகவும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

    Sivamani will marry Runa Rizvi on November 10

    சமீபத்தில் வெளிவந்த அரிமா நம்பி படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் ஆனார் சிவமணி. இவருக்கு கிருஷாணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவமணிக்கும் கஜோல் பாடகர்களான ராஜ்குமார், இந்திராணி ரிஜ்வி மகளான ருனா ரிஷ்வி என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

    இவர்கள் இருவரும் இணைந்து சர்வதேச அளவில் பல்வேறு கச்சேரிகளை நடத்தியுள்ளனர். ருனா ரிஷ்வி இந்திப் படங்களில் பாடி வருகிறார். தமிழில் அரிமா நம்பி படத்தில் அவரை பாடவைத்தார் சிவமணி.

    இப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 10ந் தேதி மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Renowned percussionist Sivamani and ghazal and sufi singer Runa Rizvi marriage on November 10 in Mumbai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X