twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கு படத்தில் நடிக்க ரூ.7 கோடி கேட்ட மாநாடு வில்லன்?... அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்!

    |

    சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருந்த படம் மாநாடு.

    இந்தப் படம் சிறப்பான வசூலுடன் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.

    சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பூஜை.. உருவாகிறதா கலகலப்பு 3!சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பூஜை.. உருவாகிறதா கலகலப்பு 3!

    இந்தப் படத்தில் நடித்திருந்த மற்றும் இயக்கியவர்களின் மார்க்கெட் வேல்யூ மற்றும் அவர்களின் சம்பளம் இதனால் உயர்ந்துள்ளது.

    நடிகர் எஸ்ஜே சூர்யா

    நடிகர் எஸ்ஜே சூர்யா


    நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்தப் படம் தீபாவளி ரேசிலிருந்து விலகிய நிலையில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தது.

    வரவேற்பை பெற்ற நடிப்பு

    வரவேற்பை பெற்ற நடிப்பு

    இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அவரின் டயலாக் டெலிவரி படத்தில் பேசப்பட்டது. அவரது ரிப்பீட்டு டயலாக் அனைவரையும் ஈர்த்தது. தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகவும் இந்தப் படம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    அடுத்தடுத்த படங்கள்

    அடுத்தடுத்த படங்கள்

    தமிழில் அவர் வில்லனாகவும் கேரக்டர் ரோலிலும் மற்றும் ஹீரோவாகவும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கிலும் இவருக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மகேஷ்பாபு -ஏஆர் முருகதாஸ் காம்பினேஷனில் வெளியான ஸ்பைடர் தெலுங்கு படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார்.

    தெலுங்கிலும் எஸ்ஜே சூர்யா

    தெலுங்கிலும் எஸ்ஜே சூர்யா

    ஆனால் பவன் கல்யாணை வைத்து இவர் இயக்கிய புலி படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து இவர் தெலுங்கு திரையுலகை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் தற்போது தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் இவரை தெலுங்கில் நடிக்க வைக்க அணுகியதாக கூறப்படுகிறது.

    அதிக சம்பளம்

    அதிக சம்பளம்

    அந்தப் படத்தில் நடிக்க எஸ்ஜே சூர்யா 7 கோடி ரூபாய் கேட்டதாகவும் இதைக் கேட்ட அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மாநாடு படத்திற்கு பிறகு எஸ்ஜே சூர்யா தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். ஆனாலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர் கேட்ட இந்தத் தொகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Recommended Video

    Yuvan -னை பங்கமாய் கலாய்த்த SJ Suryah | Maanadu Pre-release
    உயர்ந்த நடிகர்களின் சம்பளம்

    உயர்ந்த நடிகர்களின் சம்பளம்

    தற்போது திரையரங்க உரிமையை தவிர்த்து, டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகளின் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் வில்லன்களின் சம்பளமும் உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து மீண்டு தற்போது படங்களின் சூட்டிங்கும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    SJ Surya demands Rs 7 crores to act in Telugu movie?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X