Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இப்போதைக்கு நடிப்புதான்... பவனுக்கு பை... இறைவியால் மனமாற்றமடைந்த எஸ் ஜே சூர்யா!
இறைவி வெற்றி தந்த உற்சாகம், குவியும் பாராட்டுகளால் மனசு மாறிவிட்டார் எஸ் ஜே சூர்யா. இதன் விளைவு, அடுத்து தான் இயக்கவிருந்த பவன் கல்யாண் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
பவன் கல்யாண் நடிப்பில் ஒரு தெலுங்குப் படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்க ஒப்புக் கொண்டு, படப்பிடிப்பும் தொடங்கும் நிலையில் இருந்தது. மேலும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கும் திட்டத்திலும் இருந்தார்.
மனமாற்றம்
ஆனால் இறைவி படத்தில், தன்னுடைய நடிப்புக்கு அதிகப் பாராட்டுகள் கிடைத்ததால் அவர் தன் மனசை மாற்றிக் கொண்டுள்ளார்.
பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து எஸ்.ஜே. சூர்யா விலகிகd கொள்வதாக அறிவித்துள்ளார்.
எக்ஸ்க்யூஸ்
'நடிக்க வரும் வாய்ப்புகளை வீணடிக்கமுடியவில்லை. அதனால் தேதிகளில் கொஞ்சம் மாற்றம் செய்துகொள்ளலாம்' என்று எஸ்.ஜே. சூர்யா, பவன் கல்யானிடம் முதலில் சொல்லியிருக்கிறார்.
டாலி
ஆனால் இப்போது, அதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்கள் வேறு இயக்குநரை வைத்துக் கொள்ளுங்கள். வேறு படத்தில் இணையலாம்' என்று கூறி வெளியில் வந்துவிட்டாராம். அந்தத் தெலுங்குப் படத்தை டாலி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பெரிய படங்கள்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் தமிழ் - தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மேலும் இயக்குநர் செல்வராகவன் இயக்கும் படத்திலும் அவர்தான் கதாநாயகன். கெளதம் மேனன் தயாரிப்பில், நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.