twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓ கடவுளே... எல்லா நல்ல கதையையும் என்கிட்டயே அனுப்பறியே... எஸ்ஜே சூர்யாவின் வேற லெவல் ட்வீட்

    |

    சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா, மாநாடு படத்தின்மூலம் அதிகமான பாராட்டிற்கு உள்ளாகியுள்ளார்.

    தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். வில்லனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    அடுத்ததாக விஷால் 33 படத்திலும் வில்லனாக கமிட்டாகியுள்ளார்.

    சேலையை உல்டாவாக கட்டி வித்தியாசமாக போஸ் கொடுத்த நந்திதா சேலையை உல்டாவாக கட்டி வித்தியாசமாக போஸ் கொடுத்த நந்திதா

    நடிகர் எஸ்ஜே சூர்யா

    நடிகர் எஸ்ஜே சூர்யா

    நடிகர் எஸ்ஜே சூர்யா டைரக்டராக அறிமுகமாகி, குஷி, வாலி படங்களின்மூலம் சிறப்பான டைரக்டராக அறியப்பட்டுள்ளார். மற்ற நடிகர்களை வைத்து முதலில் படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக தானே நாயகனாக நடித்து படங்களை இயக்கினார்.

    மீண்டும் படங்கள்

    மீண்டும் படங்கள்

    தொடர்ந்து சில காலங்கள் இடைவெளி விட்ட எஸ்ஜே சூர்யா, மீண்டும் இறைவி, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களின்மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    மாநாடு படம்

    மாநாடு படம்

    இந்நிலையில் கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியான சிம்புவின் மாநாடு படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்தப் படம் டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை படம் கொடுத்தது.

    விஷாலுக்கு வில்லன்

    விஷாலுக்கு வில்லன்

    இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் எஸ்ஜே சூர்யா. அடுத்ததாக விஷால்33 படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கேயுரிய குறும்புடன் ட்வீட் செய்துள்ளார்.

    கடவுளிடம் பேச்சு

    கடவுளிடம் பேச்சு

    அவர் தனது பதிவில் ஓ கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டயே அனுப்புறியே என்று கேட்டுள்ளார். மேலும் சமீபத்தில் ஆதிக் ரவிசந்திரனின் கதையை கேட்டு தான் வியப்புற்றதாக தெரிவித்துள்ளார். எவ்வளவு சூப்பரா கதை சொல்கிறார் என்றும் வியப்பை வெளியிட்டுள்ளார்.

    சிறப்பான திரைக்கதை

    சிறப்பான திரைக்கதை

    மேலும் விஷால்33 படத்தை மாநாடு 2 படம்னு சொல்லலாம் என்று தெரிவித்துள்ள எஸ்ஜே சூர்யா, அப்படிப்பட்ட திரைக்கதையை இந்தப் படம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படமும் எல்லைகளை கடந்து வெற்றியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    SJ Surya hails screenplay of Vishal33 movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X