Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
புலி ஆவதற்காக எலியுடன் நடித்த எஸ்.ஜே. சூர்யா…!
சென்னை: மான்ஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகராக பல புதிய முயற்சிகளை எடுத்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படமான மான்ஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
அட்டகத்தி தினேஷ் , நிவேதா பெத்துராஜ் நடித்த ஒருநாள் கூத்து திரைப்படத்திற்குப் பிறகு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் மான்ஸ்டர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
ஸ்டூவர்ட் லிட்டில் படத்தில் வருவது போல இப்படத்தில் ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, பல புலிகளோட நடிச்ச என்ன ஒரு எலியோட நடிக்க வச்சிருக்காங்க. ஆனா உங்களுக்குத் தெரியுமா? இந்த எலிதான் எதிர்காலத்தில் என்னை ஒரு 'புலி'யா ஆக்கப் போகுது என பதிவிட்டுள்ளார்.
Pala “Puli”galoda nadicha yenna “yeli”yoda nadikka vakkirranga . but you know what, Indha “yeli”dhan futurela yenna one of the “puli” aakka pohudhu 🤣😍🙏sharing with @karthiksubbaraj @Atlee_dir @ARMurugadoss @selvaraghavan &Dir @dhanushkraja sirs SHOOT COMPLETED.SOON IN THEATRES pic.twitter.com/9wXp7mrs2A
— S J Suryah (@iam_SJSuryah) October 23, 2018
குழந்தைகளுக்குப் பிடித்த ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா இருப்பார் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் கதை முழுவதும் பிரியா பவானி சங்கரை சுற்றியே இருக்குமாம். ஆனால் அவர் கதைக்கு வெளியே இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
ஒருநாள் கூத்து திரைப்படத்தில் அடுத்தடுத்து திருப்பங்களை வைத்து படத்தை ரசிக்க வைத்தார் நெல்சன். இப்படத்தில் எஸ்ஜே.சூர்யா நடித்திருப்பது மிகப்பெரிய பலமாக உள்ளது. அதனால் நிச்சயம் சுவாராஸ்யமான படமாக இருக்கும் என நம்பலாம்.
விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாயா, மாநகரம் படங்களைத் தயாரித்த பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.