Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் சூர்யா!
சென்னை : இயக்குநராக வெற்றிப் படங்களை இயக்கி, பிறகு பல படங்களில் நடித்தும் ஹீரோவாக க்ளிக் ஆகாமல் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
அவர் நடித்த படங்களில் அவரது நடிப்புத்திறமை வெளிப்பட்டிருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'இறைவி' படத்தில்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த 'இறைவி' படம் தோல்வியடைந்தாலும், ஒரு நடிகராக அந்தப் படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய 'பிரேக்'காக அமைந்தது.
மெர்சல் வில்லன்
'இறைவி' படத்தைத் தொடர்ந்து 'ஸ்பைடர்', 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், விரைவில் வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை', 'இறவாக்காலம்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 'ஸ்பைடர்' படத்தில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது.
கார்த்திக் சுப்புராஜ் படம்
பல படங்களில் நடித்துக்கொண்டு தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படத்தில் இணைகிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வேறு ஒருவர் இயக்குகிறார்.
பாபி சிம்ஹா நடிக்கவில்லை
இந்தப்படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தனக்கு சினிமாவில் லைஃப் கொடுத்தவர் என்பதை மறந்து கார்த்திக் சுப்புராஜிடம் அதிக சம்பளம் கேட்டாராம் பாபிசிம்ஹா.
வேறொரு நடிகர்
அதனால், இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க 'டிமான்டி காலனி' படத்தில் நடித்த சனந்த் என்பவரை புக் செய்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் 'மெர்குரி' படத்திலும் சனந்த் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மீண்டும் எஸ்.ஜே.சூர்யா தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம்.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!