எஸ்.ஜே. சூர்யா கைது, ஜாமீன் சென்சார் போர்ட் பெண் உறுப்பினர் மீது செல்போனை வீசியெறிந்து கலாட்டா செய்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரானஎஸ்.ஜே. சூர்யா இன்று கைது செய்யப்பட்டார்.நியூ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னர், நடிகை கிரண் ஆடிய ஒரு குத்துப் பாட்டை சேர்க்க முடிவு செய்தசூர்யா, அப்பாடலுக்கு அனுமதி வழங்கக் கோரி தணிக்கை வாரியத்தை அணுகினார்.அப் பாடலைப் பார்த்த பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் ஆபாசமாக இப்பாடல் இருப்பதாக கூறி பாடலுக்குஅனுமதி தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக வாக்குவாதத்தில், கையில் இருந்த செல்போனை எடுத்து வானதி மீது சூர்யாவீசினார்.இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. நேற்று இந்த வழக்குவிசாரணைக்கு சூர்யா ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை.இதையடுத்து சூர்யாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி.இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது வீட்டில் இருந்து சூர்யா புறப்பட்டார். வரும் வழியில் எழும்பூர்கிருஸ்துவ தேவாலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தேவாலயத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.பிரார்த்தனை முடித்துவிட்டு வந்த அவரை போலீசார் தேவாலய வாசலிலேயே கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகோவிந்தராஜுலு முன் ஆஜர்படுத்தினர்.அப்போது தன்னை ஜாமீனில் விடக் கோரி சூர்யா ஒரு மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதி சூர்யாவை நிபந்தனைஜாமீனில் விடுதலை செய்தார்.இந்த வழக்கில் தினமும் போலீசார் முன் சூர்யா ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

By Staff

சென்சார் போர்ட் பெண் உறுப்பினர் மீது செல்போனை வீசியெறிந்து கலாட்டா செய்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரானஎஸ்.ஜே. சூர்யா இன்று கைது செய்யப்பட்டார்.

நியூ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னர், நடிகை கிரண் ஆடிய ஒரு குத்துப் பாட்டை சேர்க்க முடிவு செய்தசூர்யா, அப்பாடலுக்கு அனுமதி வழங்கக் கோரி தணிக்கை வாரியத்தை அணுகினார்.

அப் பாடலைப் பார்த்த பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் ஆபாசமாக இப்பாடல் இருப்பதாக கூறி பாடலுக்குஅனுமதி தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக வாக்குவாதத்தில், கையில் இருந்த செல்போனை எடுத்து வானதி மீது சூர்யாவீசினார்.

இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. நேற்று இந்த வழக்குவிசாரணைக்கு சூர்யா ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை.

இதையடுத்து சூர்யாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது வீட்டில் இருந்து சூர்யா புறப்பட்டார். வரும் வழியில் எழும்பூர்கிருஸ்துவ தேவாலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தேவாலயத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரார்த்தனை முடித்துவிட்டு வந்த அவரை போலீசார் தேவாலய வாசலிலேயே கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகோவிந்தராஜுலு முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது தன்னை ஜாமீனில் விடக் கோரி சூர்யா ஒரு மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதி சூர்யாவை நிபந்தனைஜாமீனில் விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் தினமும் போலீசார் முன் சூர்யா ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X