Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எஸ்.ஜே. சூர்யா கைது, ஜாமீன் சென்சார் போர்ட் பெண் உறுப்பினர் மீது செல்போனை வீசியெறிந்து கலாட்டா செய்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரானஎஸ்.ஜே. சூர்யா இன்று கைது செய்யப்பட்டார்.நியூ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னர், நடிகை கிரண் ஆடிய ஒரு குத்துப் பாட்டை சேர்க்க முடிவு செய்தசூர்யா, அப்பாடலுக்கு அனுமதி வழங்கக் கோரி தணிக்கை வாரியத்தை அணுகினார்.அப் பாடலைப் பார்த்த பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் ஆபாசமாக இப்பாடல் இருப்பதாக கூறி பாடலுக்குஅனுமதி தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக வாக்குவாதத்தில், கையில் இருந்த செல்போனை எடுத்து வானதி மீது சூர்யாவீசினார்.இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. நேற்று இந்த வழக்குவிசாரணைக்கு சூர்யா ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை.இதையடுத்து சூர்யாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி.இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது வீட்டில் இருந்து சூர்யா புறப்பட்டார். வரும் வழியில் எழும்பூர்கிருஸ்துவ தேவாலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தேவாலயத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.பிரார்த்தனை முடித்துவிட்டு வந்த அவரை போலீசார் தேவாலய வாசலிலேயே கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகோவிந்தராஜுலு முன் ஆஜர்படுத்தினர்.அப்போது தன்னை ஜாமீனில் விடக் கோரி சூர்யா ஒரு மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதி சூர்யாவை நிபந்தனைஜாமீனில் விடுதலை செய்தார்.இந்த வழக்கில் தினமும் போலீசார் முன் சூர்யா ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
சென்சார் போர்ட் பெண் உறுப்பினர் மீது செல்போனை வீசியெறிந்து கலாட்டா செய்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரானஎஸ்.ஜே. சூர்யா இன்று கைது செய்யப்பட்டார்.
நியூ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னர், நடிகை கிரண் ஆடிய ஒரு குத்துப் பாட்டை சேர்க்க முடிவு செய்தசூர்யா, அப்பாடலுக்கு அனுமதி வழங்கக் கோரி தணிக்கை வாரியத்தை அணுகினார்.
அப் பாடலைப் பார்த்த பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் ஆபாசமாக இப்பாடல் இருப்பதாக கூறி பாடலுக்குஅனுமதி தர மறுத்து விட்டார். இதுதொடர்பாக வாக்குவாதத்தில், கையில் இருந்த செல்போனை எடுத்து வானதி மீது சூர்யாவீசினார்.
இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. நேற்று இந்த வழக்குவிசாரணைக்கு சூர்யா ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை.
இதையடுத்து சூர்யாவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
இதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது வீட்டில் இருந்து சூர்யா புறப்பட்டார். வரும் வழியில் எழும்பூர்கிருஸ்துவ தேவாலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தேவாலயத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டனர்.
பிரார்த்தனை முடித்துவிட்டு வந்த அவரை போலீசார் தேவாலய வாசலிலேயே கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகோவிந்தராஜுலு முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது தன்னை ஜாமீனில் விடக் கோரி சூர்யா ஒரு மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதி சூர்யாவை நிபந்தனைஜாமீனில் விடுதலை செய்தார்.
இந்த வழக்கில் தினமும் போலீசார் முன் சூர்யா ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!