Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சின்னத்திரைக் கலைஞர்களைப் போரட்டத்துக்கு தள்ளிய நாகினி!
மெகா சீரியல்களை என்னதான் ஆண்கள் எதிர்த்தாலும் பெண்கள்தான் தொலைக்காட்சிகளுக்கு முக்கிய ரசிகர்கள் என்பதால் சீரியல்களை ஒழிக்க முடியவில்லை.
ரொம்ப்ப்ப்பத்தான் ஓவராப் போறீங்க... என்று புலம்பும் அளவுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இப்போது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். புதிதாக தமிழ் நேரடி சீரியல்கள் வெர்சஸ் டப்பிங் சீரியல்கள் என்று புதிய யுத்தம் தொடங்கியுள்ளது. பனிப்போரை நேரடி போராக்கிய பெருமை நாகினியையே சாரும்.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நாகினி டப்பிங் சீரியலுக்கு நல்ல வரவேற்பாம். எனவே அடிபாதாளத்தில் இருந்த தமிழ் நேரடி சீரியல் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை அழைத்த சேனல் நிர்வாகம் ''இன்னும் இரண்டு வாரம் உங்களுக்கு டைம். சீரியல் பிக்கப் ஆகவில்லை என்றால் நிறுத்திவிட்டு
டப்பிங் சீரியல்களை இறக்கிவிடுவோம்'' என்று உறுதியாக சொல்லிவிட்டனராம். இதனால் தான் சின்னத்திரைக் கலைஞர்கள் அவசர அவசரமாக போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். வரும் 14ம் தேதி உண்ணாவிரத அறவழி போராட்டமும் நடத்தவிருக்கிறார்கள்.