Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சின்னத்திரைக் கலைஞர்களைப் போரட்டத்துக்கு தள்ளிய நாகினி!
மெகா சீரியல்களை என்னதான் ஆண்கள் எதிர்த்தாலும் பெண்கள்தான் தொலைக்காட்சிகளுக்கு முக்கிய ரசிகர்கள் என்பதால் சீரியல்களை ஒழிக்க முடியவில்லை.
ரொம்ப்ப்ப்பத்தான் ஓவராப் போறீங்க... என்று புலம்பும் அளவுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இப்போது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். புதிதாக தமிழ் நேரடி சீரியல்கள் வெர்சஸ் டப்பிங் சீரியல்கள் என்று புதிய யுத்தம் தொடங்கியுள்ளது. பனிப்போரை நேரடி போராக்கிய பெருமை நாகினியையே சாரும்.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நாகினி டப்பிங் சீரியலுக்கு நல்ல வரவேற்பாம். எனவே அடிபாதாளத்தில் இருந்த தமிழ் நேரடி சீரியல் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை அழைத்த சேனல் நிர்வாகம் ''இன்னும் இரண்டு வாரம் உங்களுக்கு டைம். சீரியல் பிக்கப் ஆகவில்லை என்றால் நிறுத்திவிட்டு
டப்பிங் சீரியல்களை இறக்கிவிடுவோம்'' என்று உறுதியாக சொல்லிவிட்டனராம். இதனால் தான் சின்னத்திரைக் கலைஞர்கள் அவசர அவசரமாக போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். வரும் 14ம் தேதி உண்ணாவிரத அறவழி போராட்டமும் நடத்தவிருக்கிறார்கள்.