Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மங்காத்தா பட வில்லன் ரவிக்குமார் சென்னையில் படுகொலை!
சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். அதே பகுதியைச் சேர்நத் ராஜ்குமார் என்பவர் இவரது நண்பர் ஆவார். அடிக்கடி தனது நண்பரைப் பார்க்க வருவது வழக்கம். ராஜ்குமார் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ராஜ்குமாரிடம் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ரவிக்குமாரிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ராஜ்குமார். இதையடுத்து கோபம் பெருக்கெடுக்க, ராஜ்குமாரை தனது பைக்கில் அமர வைத்துக் கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருபவர்களைப் பார்க்க கிளம்பினார் ரவிக்குமார்.
நேற்று நள்ளிரவு இவர்கள் போயுளள்ளனர். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்ரி வந்தா ரமேஷ், ஜானி, தேவா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இருவரையும் பைக்கோடு வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதை எதிர்பாராத ரவிக்குமாரும், ராஜ்குமாரும் தலை தெறிக்க ஓடினர்.
அப்போது ரவிக்குமாரை அக்கும்பல் மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பலியானார். ராஜ்குமார் சிக்காமல் தப்பி ஓடி உயிர் தப்பினார்.
நண்பருக்காக பஞ்சாயத்துப் பேசப் போய் கடைசியி்ல ரவிக்குமார் பரிதாபமாக பலியாகி விட்டார். கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்க வந்தபோது ரவிக்குமாரை விட்டு விட்டு ராஜ்குமார் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.