Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காமெடி தமாக்கா...மீண்டும் இணையும் எஸ்எம்எஸ் கூட்டணி
சென்னை : தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத காமெடி, ரொமான்டிக் என்றால் அது 2009 ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் தான். இந்த படத்தை ரசிகர்கள் சுருக்கமாக எஸ்எம்எஸ் என அழைத்தனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ராஜேஷ் என்பவர் இயக்கி இருந்தார்.
ஜீவா, அனுயா லீட் ரோலில் நடிக்க, சந்தானம் ஹீரோவின் ஃபிரண்டாக நடித்திருந்த படம். ஹிட்டானிந்த படம் இன்று வரை ரசிகர்களால் பேசப்படும் படமாக உள்ளது. இதில் குடித்து விட்டு ஜீவா சிரித்துக் கொண்டே பேசும், தெரியலியே மச்சி...ஒரு குவாட்டர் சொல்லேன் என்ற டயலாக் ரொம்ப பாப்புலர்.
எஸ்எம்எஸ் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற இரு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார் டைரக்டர் ராஜேஷ். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அதே சமயம் இந்த மூன்று படங்களிலும் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
அதே போல் ராஜேஷ் இதுவரை இயக்கிய மூன்று படங்களிலுமே பாடல்கள் செம ஹிட் ஆகி உள்ளது. இதனால் இவர்கள் மீண்டும் இணையும் படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
நெற்றியில் குங்குமத்தால் நாமம் போட்ட நயன்தாரா.. வருங்கால கணவருடன் ஷீரடியில் தரிசனம்!
அதற்கு பிறகு ஜீவா மற்றும் சந்தானத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்க ராஜேஷ் பலமுறை முயற்சித்தார். அதற்காக கதைகளையும் தயாரித்து வந்தார். லேட்டஸ்ட் தகவலின் படி, தற்போது மீண்டும் ஜீவா மற்றும் சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டுள்ளாராம். இந்த படம் பற்றிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
இந்த படத்தை இயக்க மூன்று டாப் தயாரிப்பு நிறுவனங்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனவாம். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால் ஜீவா - சந்தானம் - ராஜேஷ் இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பு அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படுமாம்.