Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மல்டிப்ளெக்ஸ்களில் அநியாய விலை! - மும்பை உயர் நீதி்மன்றம்
Recommended Video
மும்பை: நாடு முழுவதும் உள்ள மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்களை அநியாய விலைக்கு விற்கிறார்கள் என்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்கள் பல மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்லவும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து தியேட்டருக்குள் உணவு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் சாந்தனு கேம்பர், மாக்ரந்த் கர்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''தியேட்டரில் அநியாய விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்க வேண்டும் என பார்வையாளர்களை கட்டாயப்படுத்த முடியாது. பார்வையாளர்களுக்கு உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கவில்லையென்றால் தியேட்டருக்குள் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யவும் கூடாது. தியேட்டருக்குள் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், பார்வையாளர்களையும் அதை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்,'' என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் 6 வாரத்திற்குள் கொள்கை முடிவை உருவாக்குவதாக மாநில அரசின் வக்கீல் கூறினார். எனவே நீதிபதிகள் மனு மீதான விசாரணையை ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.