Just In
- 7 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 7 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 8 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 9 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருமணத்துக்குப் பின் நடிப்பாரா சினேகா...? என்ன சொல்கிறார் பி்ரசன்னா?
காதலை நேர்மையாக ஒப்புக் கொண்ட சினிமா ஜோடி என்ற பெருமை (அவர்களின் பிஆர்ஓ புண்ணியத்தில்!) யைப் பெற்ற சினேகாவும், பிரசன்னாவும், தங்களின் திருமணம் மற்றும் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை திட்டம் குறித்து பத்திரிகை - தொலைக்காட்சிகளில் பேட்டிகள் அளித்து வருகிறார்கள்.
அடுத்தமாதம் தங்களின் திருமணத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு, சினேகா நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.
சினேகா தற்போது சரத்குமாருடன் விடியல், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் புதிய படம் மற்றும் ரஜினியின் கோச்சடையான் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்கள் முடிவதற்கு முன்பே, திருமணம் நடக்கக் கூடும் என்பதால், திருமணத்துக்குப் பிறகும் சினேகா நடிப்பார் என்கிறார்கள்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று சினேகாவிடம் நான் சொல்ல வில்லை. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் சினேகா அதை ஏற்பாரா என்று தெரியவில்லை. அவர் நடிப்பதற்கு ஒரு போதும் நான் தடை போட மாட்டேன். அவர் விருப்பம்தான்," என்றார்.