Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
புன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் !
Recommended Video
சென்னை : புன்னகை அரசி சினேகாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார்.
புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சினேகா. மலையாள திரைப்பட உலகில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
தமிழில் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இதன் பின் வரிசையாக படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் பெற்றார் சினேகா.
இவரை தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய படம் உன்னை நினைத்து. பின் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார் சினேகா. இதற்கு அடுத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தனுஷ் உடன் புதுப்பேட்டை, சிம்பு உடன் சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்தார்.
இவர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது சினேகாவுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது பிரசன்னா துப்பறிவாளன் இரண்டாவது பாகம் மற்றும் மாப்பியா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.