Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
புன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் !
Recommended Video
சென்னை : புன்னகை அரசி சினேகாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார்.
புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சினேகா. மலையாள திரைப்பட உலகில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
தமிழில் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இதன் பின் வரிசையாக படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் பெற்றார் சினேகா.
இவரை தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய படம் உன்னை நினைத்து. பின் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார் சினேகா. இதற்கு அடுத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தனுஷ் உடன் புதுப்பேட்டை, சிம்பு உடன் சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்தார்.
இவர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது சினேகாவுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது பிரசன்னா துப்பறிவாளன் இரண்டாவது பாகம் மற்றும் மாப்பியா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.