Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் !
Recommended Video
சென்னை : புன்னகை அரசி சினேகாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார்.
புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சினேகா. மலையாள திரைப்பட உலகில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
தமிழில் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இதன் பின் வரிசையாக படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் பெற்றார் சினேகா.
இவரை தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய படம் உன்னை நினைத்து. பின் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார் சினேகா. இதற்கு அடுத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தனுஷ் உடன் புதுப்பேட்டை, சிம்பு உடன் சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்தார்.
இவர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது சினேகாவுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது பிரசன்னா துப்பறிவாளன் இரண்டாவது பாகம் மற்றும் மாப்பியா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.