Don't Miss!
- News லாட்ஜ்ஜில் யாரது? இங்கே என்ன வேலை? உடனே வெளியேறுங்க.. சென்னையில் சாட்டையை சுழட்டும் போலீஸ் - அதிரடி
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
புன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் !
Recommended Video
சென்னை : புன்னகை அரசி சினேகாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார்.
புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சினேகா. மலையாள திரைப்பட உலகில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
தமிழில் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இதன் பின் வரிசையாக படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் பெற்றார் சினேகா.
இவரை தமிழ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிய படம் உன்னை நினைத்து. பின் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார் சினேகா. இதற்கு அடுத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் தனுஷ் உடன் புதுப்பேட்டை, சிம்பு உடன் சிலம்பாட்டம் போன்ற படங்களில் நடித்தார்.
இவர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு விஹான் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது சினேகாவுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தை மகள் வந்தாள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது பிரசன்னா துப்பறிவாளன் இரண்டாவது பாகம் மற்றும் மாப்பியா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.