சினேகா - பிரசன்னா விருந்து - நடிகர் நடிகைகள் பங்கேற்கிறார்கள்!

வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நேற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. நடிகர், நடிகைகள், உறவினர்கள் நேரில் வாழ்த்தினர்.
சினேகாவுக்கு பிரசன்னா நாயுடு முறைப்படியும், பிராமணர் முறைப்படியும் இரண்டு தடவை தாலி கட்டினார். வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினமே நடந்துவிட்டாலும், நடிகர், நடிகைகளுக்காக பிரத்யேகமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருமண வரவேற்பு கிண்டியில் உள்ள புதிய நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு உயர்தர விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
திருமணத்துக்கு வராத நட்சத்திரங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். ரஜினி - கமல் இருவரும் ஊரில் இல்லாததால் அவர்கள் பங்கேற்கமாட்டார்கள்.
தேனிலவுக்காக சினேகாவும், பிரசன்னாவும் ஓரிரு தினங்களில் வெளிநாடு புறப்படுகின்றனர். எந்த நாட்டுக்கு போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.
தேனிலவுக்கு சென்று திரும்பியதும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதா இல்லையா என்று தெரிவிக்கிறாராம் சினேகா.


Click it and Unblock the Notifications











