பாரதிராஜா சமாதி மண்ணை குழந்தைகளின் நெற்றியில் வைத்துவிட்ட சினேகன்.. தகப்பன் ஸ்தானத்தில் இருந்தவரல்லவா

சென்னை:தமிழ் சினிமாவின் இமயமாகத் திகழ்ந்து அண்மையில் மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் சமாதிக்கு, அவரிடம் மகன் போன்ற அன்பைப் பெற்று விளங்கிய பாடலாசிரியர் சினேகன் தனது குடும்பத்துடன் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

​இயக்குனர் பாரதிராஜா மீது அளவற்ற பற்றும் மரியாதையும் கொண்டவர் கவிஞர் சினேகன். பாரதிராஜாவும் சினேகனைத் தனது சொந்த மகன் போலவே பாவித்து வந்தார். இந்த நிலையில், பாரதிராஜாவின் மறைவு சினேகன் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

Snehan s Emotional Tribute Family Visits Bharathiraja s Memorial in Theni

​சமாதி மண்ணை நெற்றியில் இட்டுக் கொண்ட குடும்பத்தினர்: ​பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டம் கங்குவார்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன், அவரது மனைவி கன்னிகா மற்றும் அவர்களது இரு இரட்டை மகள்கள் என நான்கு பேரும் தேனியிலுள்ள பாரதிராஜாவின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

​அங்கு பாரதிராஜாவின் சமாதியை வணங்கிய அவர்கள், மிகுந்த மரியாதையுடன் அந்த சமாதியில் இருந்த புனித மண்ணை எடுத்து, நெற்றியில் திருநீறு பூசுவதைப் போல தங்களது நெற்றியில் இட்டுக் கொண்டனர். தங்களது பிஞ்சுக் குழந்தைகளுக்கும் அந்த மண்ணைத் தொட்டு நெற்றியில் திலகமிட்டனர்.

கன்னிகா உருக்கம்: ​இந்த வீடியோவைப் பகிர்ந்து சினேகனின் மனைவி கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நெகிழ்ச்சியுடன் எழுதியிருப்பதாவது, ​"ஒரு மாநுட கலைஞன் இளைப்பாறும் இடம்... இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அன்பின் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்தது போல், எங்கள் மகள்களுக்கும் கிடைக்கப் பிரார்த்தனை செய்தோம்."

​"தகப்பனின் மரண துயரம்..." - ஏற்கனவே உருகிய சினேகன்: பாரதிராஜா மறைந்த சமயத்தில், கவிஞர் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் இணைந்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பாரதிராஜாவுடன் இருந்த நினைவுகளை வீடியோவாகப் பகிர்ந்து, தங்களது ஆழமான துயரத்தைப் பதிவு செய்திருந்தனர். அதில் சினேகன் குறிப்பிட்டிருந்த வரிகள் காண்போரைக் கண்கலங்கச் செய்தன.
​"என் தகப்பனாரின் மரண துயரத்திற்கு இணையான துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது மனசு. இவரின் கரம் பிடித்துப் பிடித்து நடந்திருக்கிறேன், கால் பற்றியும் அழுது இருக்கிறேன். என் வாழ்வின் வழிநெடுக இவர் நட்டு வைத்த நினைவு மரங்கள் எல்லாம் வரிசையாய் பூத்து நிற்கிறது... எதைச் சொல்ல, எதை தள்ள!"

​பெற்ற தகப்பனை இழந்தது போன்ற துயரத்தில் இருந்த சினேகன், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சென்று தங்களது 'குடும்பப் பெரியவரின்' ஆசியைப் பெற்று வந்திருப்பது ஒட்டுமொத்த இணையவாசிகளையும், திரையுலகினரையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X