Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
பாடலாசிரியர்களுக்கு சமூகப் பொறுப்பு நிச்சயம் தேவை- வைரமுத்து
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் பாடலாசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சமூகப் பொறுப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.
சிம்பு குரலில் அனிருத் இசையமைப்பில் சில நாட்களுக்கு முன்னால் வெளியான பீப் பாடல் தமிழக மக்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இவர்கள் இருவர் மீதும் கோவை போலீசில் மகளிர் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் இருவரையும் கைது செய்திட கோவை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து முன்னணி எழுத்தாளரும்,கவிஞருமான வைரமுத்து கூறும்போது "நான் அந்த பாடலை இதுவரை கேட்கவில்லை. பாடலை கேட்காத நிலையில் என்னால் எந்தவொரு விமர்சனமும் செய்யமுடியாது.
எனினும் எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை.அவர்கள் தங்களுக்கென்று சில எல்லைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
கருத்து ஆழமுள்ள பாடல்கள் காலப்போக்கில் குறைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது" என்று பீப் பாடல் குறித்த விவகாரத்தில் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.