Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
விமான டாய்லெட்டில் தாய்ப்பாலை பம்ப் செய்திருக்கிறேன்: வாரிசு நடிகை
மும்பை: விமான கழிவறையில் தனது குழந்தைக்காக தாய்ப்பாலை பாட்டிலில் பம்ப் செய்ததாக நடிகை சோஹா அலி கான் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பொது இடங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இந்நிலையில் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை பிரபலங்கள் ஊக்குவிக்கத் துவங்கியுள்ளனர்.
பாலிவுட் நடிகை சோஹா அலி கான் இது குறித்து சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
தாய்ப்பால்
முதல் முறையாக தாயாகியுள்ளது மிகவும் சவாலாக உள்ளது. என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தை பெற்ற பிறகும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது வினோதமான இடங்களில் எல்லாம் தாய்ப்பாலை பாட்டிலில் பம்ப் செய்துள்ளேன்.
சோஹா அலி கான்
விமான கழிவறையில் தாய்ப்பாலை பாட்டிலில் பம்ப் செய்திருக்கிறேன். சீட்பெல்ட் போடுமாறு அறிவிப்பு வெளியானதும் அவசர அவசரமாக இருக்கைக்கு ஓடி வந்திருக்கிறேன். அவ்வாறு ஓடி வந்தபோது விலை மதிப்பில்லா தாய்ப்பால் வலி நெடுகிலும் சிந்தியுள்ளது. நான் வந்து இருக்கையில் அமர்ந்ததும் மேக்கப் போட சென்றீர்களா என்று விமான பணிப்பெண் கேட்டார். அதற்கு நான் இல்லை என்று பதில் அளித்தேன்.
சவால்கள்
பொது இடங்களில் தாய்ப்பால் கொடுத்தால் கேவலமாக பார்க்கிறார்கள். ஆனால் இந்த மனநிலை மாற வேண்டும். பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை தடுக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும். தாய்மையின் சவால்களை நான் மட்டும் தனியாக எதிர்கொள்ளவில்லை. என்னை போன்று நிறைய தாய்மார்களும் அதே சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் சோஹா.
பெண்
சோஹா சொல்வது வரவேற்கத்தக்கது தான். ஆனால் வெளிநாடுகளில் தாய்ப்பால் கொடுத்தால் யாரும் அந்த பெண்ணை வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்தியாவில் எந்த பெண்ணாவது பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்தால் அவர் தாய் என்பதை மறந்து அவரின் மார்பகங்களை பார்க்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.