Don't Miss!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
என்னை பேச வைக்காதீங்க, அப்புறம் பல மேட்டர் வெளியே வரும்: நடிகர் பேட்டி
திருவனந்தபுரம்: நானும், எனது மனைவியும் பிரிய சில பிரபலங்கள் தான் காரணம் என்று மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்திற்கு பிறகு மஞ்சு மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார்.
அவர்கள் பிரிய நடிகை காவ்யா மாதவன் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து திலீப் கூறுகையில்,
மஞ்சு
நானும், மஞ்சுவும் கணவன் மனைவி என்பதையும் தாண்டி நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இன்றி இருந்தது.
பிரிவு
சில பிரபலங்கள் எங்கள் வாழ்வில் நுழைந்து மஞ்சுவின் மனதை மாற்றினார்கள். அதன் பிறகே எங்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. விவாகரத்து தொடர்பாக மனு தாக்கல் செய்தபோது அதில் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன்.
இமேஜ்
எங்கள் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த பிரபலங்கள் தங்களின் இமேஜை பெரிதும் மதிப்பவர்கள். அவர்களின் இமேஜை மனதில் வைத்தே நான் அவர்களின் பெயர்களை வெளியே சொல்லவில்லை. என்னை பேச வைக்க வேண்டாம். நான் வாயை திறந்த பல விஷயங்கள் வெளியே வரும்.
ஆனால்
தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தால் அந்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன். மஞ்சு படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சி. அவர் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்றார் திலீப்.