Don't Miss!
- News கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு.. ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் கிளை கேள்வி
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என் மகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்கள்: கமல் திடுக் தகவல்
சென்னை: தனது மகளை கடத்த திட்டம் தீட்டப்பட்டதாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸன் தனக்கு பிடித்த 70 இந்திய படங்களின் பட்டியலை பிரபல ஆங்கில நாளிதழிடம் அளித்துள்ளார். அந்த பட்டியலில் கமல் நடித்த மகாநதி படமும் உள்ளது.
இந்நிலையில் மகாநதி கதை குறித்தும் அவர் ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார்.
மகாநதி
தேசிய விருது பெற்ற மகாநதி படத்தில் கமல் நடிக்க மட்டும் இல்லை கதை, திரைக்கதையும் எழுதியிருந்தார். கதைப்படி ஹீரோவின் மகளை கடத்தி விற்றுவிடுவார்கள்.
கமல்
மகாநதி கதையை எழுத என்னை எது தூண்டியது என்று இதுவரை நான் பேசியது இல்லை. என் மகள்கள் வளர்ந்துவிட்டதால் தற்போது அதை கூறுகிறேன் என்கிறார் கமல்.
கடத்தல்
என் வீட்டில் வேலை செய்தவர்கள் என் மகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்கு அவர்கள் ஒத்திகையும் பார்த்தனர். தற்செயலாக எனக்கு அவர்களின் திட்டம் தெரிய வந்து கோபம் அடைந்தேன். என் குழந்தைக்காக கொலையும் செய்ய தயார் ஆனேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.
கதை
புது திரைக்கதை எழுத நினைத்து அது ஒரு மாதமாக தள்ளிப் போனது. பின்னர் அமர்ந்தபோது தானாக இந்த கதையை எழுதிவிட்டேன். ஏதாவது கெட்டது நடந்து விடுமோ என்ற பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று கமல் கூறியுள்ளார். கமலுக்கு ஸ்ருதி, அக்ஷரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் யாரை கடத்த திட்டம் தீட்டப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.