Amaran: அமரன் தியேட்டரில் குண்டு வீச்சு.. திருநெல்வேலியில் பதற்றம்.. S.K படத்துக்கே இந்த நிலைமையா?
திருநெல்வேலி: சிவகார்த்திகேய்அன் - சாய் பல்லவி நடிப்பில் திபாவளிக்கு ரிலீஸான படம் அமரன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியது. படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூபாய் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் சிறப்பாக ஓடிக்கொண்டு இருப்பதால் படத்தினை ஓடிடி தளத்தில் பொருமையாக வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அமரன் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 16ஆம் தேதி காலையில் தியேட்டரின் வளாகத்தில் மர்ம நபர்கள் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இது பெரும் சத்தத்துடன் வெடித்ததால், அக்கம் பக்கத்தினர் உடனே தியேட்டரில் என்ன ஆச்சு? எதாவது விபத்தா என பார்க்க வந்தபோதுதான், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



Click it and Unblock the Notifications











