Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 2 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 5 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 6 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்பாவின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் எடுக்கும் படம் 'அரளி'!

சென்னை: தந்தையின் சினிமாக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக, அரளி என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சுப்பாராஜ்.
மகன் அல்லது மகளின் சினிமா கனவை நிறைவேற்றுவதற்காக தந்தை தயாரிப்பாளராகவோ, இயக்குநராகவோ மாறுவது அடிக்கடி நாம் கேள்விப்படும் விசயம் தான். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, தன் தந்தை அருணாச்சலத்திற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார் சுப்பாராஜ்.

தன் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற, அவரைக் கதையின் நாயகனாக வைத்து அரளி என்ற பெயரில் படம் ஒன்றை இவர் தயாரித்துள்ளார். பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும், தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு நகர்கிறது அரளி.
இப்படத்தில் நாயகனாக மதுசூதன், நாயகியாக மஞ்சுளா ரதோட் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், காளிதாஸ், அமிர்தலிங்கம், கோவை செந்தில் , சைக்கிள் மணி, ராஜ் கிருஷ்ணா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் சுப்பாராஜ்.
இந்நிலையில், பெற்றோரை போற்றுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார் சுப்பாராஜ். இதன் தொடக்க விழாவில், நடிகர்கள் ராதாரவி, கரிகாலன், எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர் தாஸ் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய ராதாரவி, "நான் விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அதை சுப்பாராஜ் தான் இயக்குவார்" என உறுதியளித்தார்.