Don't Miss!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
அப்பாவின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் எடுக்கும் படம் 'அரளி'!
தந்தையை கதாநாயகனாக்கி அரளி என்ற படத்தை தயாரித்து இயக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் சுப்பாராஜ்.
Recommended Video
சென்னை: தந்தையின் சினிமாக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக, அரளி என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சுப்பாராஜ்.
மகன் அல்லது மகளின் சினிமா கனவை நிறைவேற்றுவதற்காக தந்தை தயாரிப்பாளராகவோ, இயக்குநராகவோ மாறுவது அடிக்கடி நாம் கேள்விப்படும் விசயம் தான். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, தன் தந்தை அருணாச்சலத்திற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார் சுப்பாராஜ்.
தன் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற, அவரைக் கதையின் நாயகனாக வைத்து அரளி என்ற பெயரில் படம் ஒன்றை இவர் தயாரித்துள்ளார். பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும், தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு நகர்கிறது அரளி.
இப்படத்தில் நாயகனாக மதுசூதன், நாயகியாக மஞ்சுளா ரதோட் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், காளிதாஸ், அமிர்தலிங்கம், கோவை செந்தில் , சைக்கிள் மணி, ராஜ் கிருஷ்ணா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் சுப்பாராஜ்.
இந்நிலையில், பெற்றோரை போற்றுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார் சுப்பாராஜ். இதன் தொடக்க விழாவில், நடிகர்கள் ராதாரவி, கரிகாலன், எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர் தாஸ் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய ராதாரவி, "நான் விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அதை சுப்பாராஜ் தான் இயக்குவார்" என உறுதியளித்தார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்