Don't Miss!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- News "ஜெயலலிதாவை எப்படியெல்லாம் கேவலப்படுத்தியது திமுக.. நினைச்சு பாருங்க.." சேலத்தில் சீறிய மோடி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
அப்பாவின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் எடுக்கும் படம் 'அரளி'!
தந்தையை கதாநாயகனாக்கி அரளி என்ற படத்தை தயாரித்து இயக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் சுப்பாராஜ்.
Recommended Video
சென்னை: தந்தையின் சினிமாக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக, அரளி என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சுப்பாராஜ்.
மகன் அல்லது மகளின் சினிமா கனவை நிறைவேற்றுவதற்காக தந்தை தயாரிப்பாளராகவோ, இயக்குநராகவோ மாறுவது அடிக்கடி நாம் கேள்விப்படும் விசயம் தான். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, தன் தந்தை அருணாச்சலத்திற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார் சுப்பாராஜ்.
தன் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற, அவரைக் கதையின் நாயகனாக வைத்து அரளி என்ற பெயரில் படம் ஒன்றை இவர் தயாரித்துள்ளார். பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும், தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு நகர்கிறது அரளி.
இப்படத்தில் நாயகனாக மதுசூதன், நாயகியாக மஞ்சுளா ரதோட் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், காளிதாஸ், அமிர்தலிங்கம், கோவை செந்தில் , சைக்கிள் மணி, ராஜ் கிருஷ்ணா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் சுப்பாராஜ்.
இந்நிலையில், பெற்றோரை போற்றுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார் சுப்பாராஜ். இதன் தொடக்க விழாவில், நடிகர்கள் ராதாரவி, கரிகாலன், எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர் தாஸ் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய ராதாரவி, "நான் விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அதை சுப்பாராஜ் தான் இயக்குவார்" என உறுதியளித்தார்.