Don't Miss!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
தீ எரியட்டும், எனக்கு கவலையில்லை.. ட்விட்டர் கணக்கில் இருந்து திடீரென்று வெளியேறிய பிரபல ஹீரோயின்!
மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா, தனது ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
வாரிசு நடிகர், நடிகைள்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, இந்தி சினிமாவில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. சினிமாவில் நிலவும் அரசியல், வாரிசு நடிகர், நடிகைகளால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோவது உள்ளிட்டவற்றை வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.
சோனாக்ஷி சின்ஹா
சிலர், நேரடியாக வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களுக்கே சென்று சரமாரியாக விளாசினர். நடிகை சோனாக்ஷியின் பக்கங்களுக்கு சென்றும் சில நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர். சுஷாந்த் சிங் மரணமடைந்தபோது, நடிகை கங்கனா, பாலிவுட்டை கடுமையாகச் சாடியிருந்தார். இது பரபரப்பானது. கடும் வாக்குவாதங்களும் நடந்தன.
விளம்பரம் தேடுகிறார்கள்
அப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை சோனாக்ஷி, 'ஒருவர் மரணமடைந்திருக்கும் நேரத்தில் சிலர் அவர்கள் பிரச்னைகளைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அப்படி செய்வதை நிறுத்துங்கள். உங்களது எதிர்மறைக் கருத்தும், வெறுப்பும் இப்போது தேவையற்றது' என்று கூறியிருந்தார்.
மன ஆரோக்கியம்
இதை கங்கனாவுக்கு எதிராகத்தான் அவர் கூறியதாக ரசிகர்கள் கூறினர். இதற்கும் காரசாரமான வாக்குவாதங்கள் கிளம்பின. இந்நிலையில் சோனாக்ஷி, தனது ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார். 'உங்கள் மன ஆரோக்கியத்தை காப்பதற்கான முதல்படி எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான்.
செயலிழக்கச் செய்கிறேன்
இப்போதெல்லாம் எதிர்மறை விஷயங்கள் ட்விட்டரில்தான் அதிகமாக இருக்கிறது. நான் எனது கணக்கைச் செயலிழக்கச் செய்கிறேன்' என்று கூறியுள்ளார். பின்னர் இந்த ஸ்கிரீன்ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தீ எரியட்டும், எனக்கு கவலை இல்லை' என்று கூறியுள்ளார். அதில், ரசிகள் கருத்துத் தெரிவிக்கும் பகுதியையும் முடக்கி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்