Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
'உரிமைக்கு குரல் கொடுக்கும் சக மனிதர்கள்..' அக்ஷய் குமார், அஜய் தேவ்கனை சாடிய ரஜினி பட ஹீரோயின்!
மும்பை: விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் பிரபலங்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆதரித்துள்ளார் ரஜினி பட நாயகியான சோனாக்ஷி சின்ஹா.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சர்வதேச பட விழா.. பட்டுப்புடவையில் நயன்தாரா.. வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன்.. வைரல் போட்டோஸ்!
மத்திய அரசு அவர்களுக்கு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருந்தும் சுமூகமான முடிவு எடுக்கப்படவில்லை.
டிராக்டர் பேரணி
குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது நடந்த வன்முறை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையே விவசாயிகள் தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நாளை நடத்த இருக்கின்றனர்.
ஆதரவும் எதிர்ப்பும்
அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு அதிக அளவில் விவசாயிகள் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாப் பாடகி ரிஹானா
இந்நிலையில், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, மியா கலீஃபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதன்மூலம் இந்திய விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
உலக அளவில்
அமெரிக்கா பாப் பாடகி ரிஹானா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த போராட்டம் பற்றிய செய்தி லிங்க்கை பகிர்ந்து 'ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?'என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு பெரும் வைரலானது. உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது.
அக்ஷய் குமார்
இதையடுத்து நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், சச்சின் டெண்டுல்கர், ரெய்னா உள்ளிட்ட பிரபலங்கள் #IndiaTogether, #IndiaAgainstPropaganda என்ற ஹேஷ்டேக்குகள் மூலம் இந்தியர்களின் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெளிநாட்டினர் இதில் தலையிட வேண்டாம் என்று பதிவிட்டனர்.
மாறக் கூடாது
இதையடுத்து நடிகை டாப்ஸி தனது ட்விட்டரில், ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை குலைப்பதாகவும் ஒரு ஜோக் உங்கள் நம்பிக்கையை பாதிப்பதாகவும் ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை பாதிப்பதாகவும் நினைத்தால், நீங்கள் தான் உங்கள் மதிப்பை வலுப்படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு அடுத்தவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களாக மாறக்கூடாது என்று பதிவிட்டார்.
சோனாக்ஷி சின்ஹா
இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய்தேவ்கனை சாடியுள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்கப்படுகிறார்கள்.
உரிமை குரல்
வெறுப்பு பேச்சு அதிகரித்து வருகிறது. இதுதான் உலக அளவில் இந்த பிரச்னை கவனிக்கப்பட காரணம். நம் நாட்டின் பிரச்னையில் வெளிநாட்டு சக்திகள் தலையிட நினைப்பதாக இதைக் கருத வேண்டாம். மற்ற மனிதர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக மனிதர்கள்தான் அவர்கள் என்று கூறியுள்ளார்.
-
கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!