Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சோனாலி போகத் உடலில் ஏகப்பட்ட காயங்கள்.. இது கொலை தான் என வந்த பிரேத பரிசோதனை அறிக்கை.. இருவர் கைது
மும்பை: கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிக் பாஸ் பிரபலமும் அரசியல்வாதியுமான சோனாலி போகத் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
முதல் கட்ட விசாரணையாக சோனாலி போகத் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், சோனாலி போகத்தின் அம்மா, உணவு சாப்பிட்ட பிறகு தனக்கு அசெளகர்யமாக இருந்ததாக சோனாலி தன்னிடம் போனில் சொன்னார் என சந்தேகத்தை கிளப்பினார்.
தன்னை நிராகரித்த நடிகர்களுக்கு வாணி போஜன் திருப்பி என்ன செய்தார் தெரியுமா?
படு கொலை
மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என கடந்த திங்கட்கிழமை சோனாலி போகத்தை செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு அவருடன் வந்தவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு சென்ற போதே அவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கோவா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சோனாலி போகத் மாரடைப்பு காரணமாக இறக்கவில்லை என அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
பலத்த காயங்கள்
சோனாலி போகத்தை பலவந்தப்படுத்தி இருப்பதாகவும் அவரது உடலில் ஏகப்பட்ட பலத்த காயங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான நிலையில், இது நிச்சயம் படுகொலை தான் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோனாலியின் கணவர் மர்மமாக இறந்ததை போலவே இவரது மரணத்திலும் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் சந்தேகித்தது சரியாக போய் விட்டது.
இருவர் கைது
சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு தாக்கா கொடுத்த புகாரின் பேரில் சோனாலி போகத் உடன் கோவாவுக்கு சென்ற சக்வான் மற்றும் வாசியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகும் என்றும் தனது சகோதரியை திட்டமிட்டே கோவாவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனர் என்றும் புகார் அளித்துள்ளார் ரிங்கு தாக்கா.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
மாரடைப்பு ஏற்பட்டு 41 வயது பாஜக பெண் தலைவர் உயிரிழந்து விட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தனது சகோதரி ஃபிட்டாகவே இருந்தார் என சொல்லி வந்த சகோதர் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது சோனாலி போகத் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா என்கிற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.