Don't Miss!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சோனம் கபூர் உடல் நிலையில் முன்னேற்றம்
மும்பை: பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர், நடிகர் சல்மான்கானுடன் பிரேம் ரத்தன் தான் பயோ' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை அடுத்த கொண்டல் பகுதியில் நடந்தது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகை சோனம் கபூர் திடீரென பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த அவரது தாயார் சுனிதா கபூர் ராஜ்கோட் விரைந்து, சோனம் கபூரை தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வந்தார். பின்னர், சோனம் கபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவார் என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் ஒருவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
மேலும், சோனம் கபூர் மீது ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் கொண்டுள்ள அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.