Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்வராகவனுடன் விவாகரத்து பற்றி மனம் திறந்த சோனியா அகர்வால்!
சென்னை : தனித்துவமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் செல்வராகவன்
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் அதைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்
இந்த நிலையில் செல்வராகவனுடன் விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் மனம் திறந்து பேசியுள்ளார்
செல்வராகவன் பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த தனுஷ்.. கடந்து வந்த பாதை!
கதாநாயகியாக அறிமுகம்
முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இயக்குனர் செல்வராகவன் . காதல் , கேங்ஸ்டர் படங்களை தனது தனித்துவமான பாணியில் இயக்கி புகழ் பெற்ற செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா.
முதல் படத்திலேயே விருது
முதல் படத்திலேயே நிதானமான நடிப்பு ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகு கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்கள் மத்தியில் நற்பெயர் எடுத்த சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதீத காதலை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தமிழில் சோனியா அகர்வால் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்றார்
காதலித்து திருமணம்
காதல் கொண்டேன் வெற்றியைத் தொடர்ந்து செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் பணியாற்றினர். அந்த வகையில் 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் செல்வராகவன் சோனியா அகர்வால் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் மனம் ஒத்து போய் காதலிக்க ஆரம்பித்தனர். பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
விவாகரத்து செய்வதாக
திருமணம் செய்து கொண்ட சில வருடங்களிலேயே செல்வராகவன் சோனியா அகர்வால் ஜோடி பிரிவதாக அறிவித்து ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போயினர். இப்பொழுது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும் நல்ல நண்பர்களாக உள்ளனர். சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது
செல்வராகவன் சோனியா அகர்வால் விவாகரத்து குறித்து ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்ற நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் பேசிய சோனியா அகர்வால் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவனுடன் இணைந்து தொடர்ந்து படங்களில் நடித்தேன் அப்பொழுது அவரின் ஹார்ட் வொர்க் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இருவரும் பிரிந்தோம்
இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம் பின் திருமணம் செய்து கொண்டோம். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மனம் வலியுடனேயே இருவரும் பிரிந்தோம் என சோனியா அகர்வால் மனம் திறந்து பேசியுள்ளார்.